Wednesday, January 07, 2009

வை.ஏகாதசி: புதிரா? புனிதமா?? - தெய்வத் தமிழ் மொழி!

Jan-10, 2009 01:56 PM EST
முடிவுகள் அறிவிச்சாச்சே! :)
ஏகாதசியில் போட்ட புதிரை, ஆருத்ராவில் திறப்பதும், சாலப் பொருத்தமே! :)

வின்னர்கள்! புதிரா புனிதமா மன்னர்கள் இதோ!
1. ராகவ்
2. கெக்கேபிக்குணி
3. தியாகராஜன்
(அனானியார் முதல் பரிசைத் தட்டிச் செல்வது, இதுவே முதல் முறை-ன்னு நினைக்கிறேன்! வாழ்க வாழ்க! :))))

தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்!
1. குமரன்
2. ஷோபா


விடைகள் கீழே BOLD செய்யப்பட்டுள்ளன!
விடைக்கான விளக்கங்கள், விடை காண விளக்கங்கள் = எல்லாவற்றையும் இரு பெரும் சிகரங்கள் செய்யப் போகின்றன!
* 1-5 மெது விடைகளைச் குமரன் சுடுவாரு! :)
* 6-10 மசால் விடைகளை ஜிரா சுடுவாரு! :)

வென்றவர்க்கும் நின்றவர்க்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!


மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீக? புதிரா புனிதமா குவிஜ் ஆடி கொஞ்சம் நாள் ஆயிருச்சா? பரவாயில்ல! வைகுண்ட ஏகாதசி அன்னிக்கி கண் முழிச்சி, ஏதாச்சும் ஆடணும்-ல? எத்தனை நாள் தான் பாம்பு-ஏணி விளையாட்டு வெளையாடிக்கிட்டு இருப்பீக? இந்த ஏகாதசிக்குப் "புதிரா? புனிதமா?" ஆடலாம் வாங்க! :)

அப்படியே தொடர் திருப்பாவைப் பதிவில் இருந்தும், ஜாலியா ஒரு விளையாட்டுக்கு ப்ரேக் அடிச்சா மாதிரியும் இருக்கும்! :)
இன்னிக்கி சிறப்புத் தலைப்பு! - தெய்வத் தமிழ் மொழி!

அவன் மட்டும் தான் தமிழோடு விளையாடுவானா? நாம கூடத் தமிழோடு விளையாடவே வந்தோம்! விளையாடலாமா? :)
இன்னிக்கி ராத்திரி நல்லா முழிச்சிக்கிட்டே ஆடுங்க! :))
விடைகள், வெள்ளி இரவு (நியூயார்க் நேரப்படி)!


1

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு!

திருவடிகளின் பெருமையைச் சொல்லும் இந்தக் குறள் எந்த அதிகாரம்?

1

அ) கடவுள் வாழ்த்து

ஆ) துறவு

இ) நீத்தார் பெருமை

ஈ) தவம்

2

பக்தி இலக்கியப் பெண் கவிஞர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்கள் இருவர் = ஆண்டாள், காரைக்கால் அம்மையார்!

12 ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருத்தி! 63 நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள்! அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார்.

மற்ற இருவர் யார்? இந்த இருவரும் பாடல்கள் எதுவும் எழுதலை!

2

அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள்

இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள்

ஈ) திலகவதியார்/ வாயிலார்

3

ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்துக்கும் முந்தையது என்பது ஆய்வு! விருத்தம் என்னும் பா வகைகள் இதன் சிறப்பு! கம்பனுக்கு முன்னோடி!

ஆன்மீகம் எப்பமே போர்! இல்வாழ்க்கை (அகப்பொருள்) பற்றி அது ஜாலியாவே பேசாது! - இப்படி ஒரு மதுரைக்கார புலவர் இடித்துக் காட்ட, ஒரு துறவி எழுதிய ரொமான்ஸ் கலந்த காவியம்! சீவகனுக்கு மொத்தம் எட்டு மனைவிகள் :)

இது எந்தச் சமய நூல்?/ஆசிரியர் யார்?

3

அ) பெளத்தம்/ சீத்தலைச் சாத்தனார்

ஆ) சமணம்/ பெயர் இல்லை (அனானி)

இ) பெளத்தம்/ நாகுதத்தனார்

ஈ) சமணம்/ திருத்தக்க தேவர்

4

குறிஞ்சி, முல்லை-ன்னு இன்னிக்கி பேச்சு வழக்கில் நாம ஆக்கிப்புட்டோம்! ஆனால் தொல்காப்பியர் ஏனோ, முல்லை நிலத்தையும் மாயோனையும் முதலில் சொல்லிவிட்டு, பின்னர் தான் குறிஞ்சியும் சேயோனும் சொல்கிறார்! - இது ஏன்? என்பது ஆய்வுக்குரியது!

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

அகத் திணைகளில் குறிஞ்சி = முருகனுக்கு, முல்லை = பெருமாளுக்கு! ஆனால் புறத்திணைத் துறைகளிலும் ஒரு துறையை மாயோனுக்கும், சேயோனுக்கும் ஒதுக்கறாரு தொல்காப்பியர்! மாயோனுக்கும் சேயோனுக்கும் என்னென்ன துறைகள்?

4

அ) கொற்றவை நிலை/கரந்தை

ஆ) பூவைநிலை/ வெறியாட்டு

இ) பூவைநிலை/ பிள்ளைநிலை

ஈ) குரவை/ வெறியாட்டு

5

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு

இந்தக் குறளில் ஒரு அவதாரம் குறிக்கப்படுவதாக, மணக்குடவர், ஜி.யு. போப் முதற்கொண்டு, டாக்டர் மு.வ வரை எல்லாரும் உரை எழுதினார்கள்!

ஆனால் இது அவதாரத்தைக் குறிக்கவில்லை என்பது தேவநேயப் பாவாணர் மற்றும் டாக்டர். கலைஞர் ஆகியோரின் அண்மைக் கால உரைகள்!

எந்த அவதாரம் இது? (நோ சாய்ஸ்)/ இந்தக் குறளின் அதிகாரம் இது?

5. வாமன-திரிவிக்ரம அவதாரம்

அ) ---/ ஊக்கமுடைமை

ஆ) ---/ஆள்வினை உடைமை

இ) ---/மடியின்மை

ஈ) ---/மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

6

சங்க காலத்துப் பழந் தமிழ் நூல் ஒன்றைக் கொண்டாந்து, பிற்காலத் தேவாரச் சைவத் திருமுறைகளில் தொகுத்து வைத்துள்ளார்கள்!

எந்த நூல்?/ யார் ஆசிரியர்?

6

அ) கலித் தொகை/பல ஆசிரியர்கள்

ஆ) திருக்குறள்/ திருவள்ளுவ நாயனார்

இ) குறிஞ்சிப்பாட்டு/ கபிலர்

ஈ) திருமுருகு ஆற்றுப்படை/ நக்கீரர்

7

சிலப்பதிகாரத்தில் சில பிரபலமான முருகன் ஆலயங்களும், பெருமாள் ஆலயங்களும் காட்டப்படுகின்றன!

இதில் ஒரே ஆற்றங்கறையில் இருக்கும் பெருமாள்/முருகன் ஆலயங்கள் எவையெவை?

7

அ) திருவேங்கடம்/ காளத்தி

ஆ) அழகர் கோயில்/ பழமுதிர் சோலை

இ) திருவரங்கம்/ சுவாமிமலை

ஈ) அழகர் கோயில்/ திருப்பரங்குன்றம்

8

கம்ப இராமாயண அரங்கேற்றம், கந்த புராண அரங்கேற்றம் - இரண்டிலுமே துவங்கும் போதே சிக்கல்! வேற யாரு? அந்நாளைய பதிவர்கள் - சில புலவர்கள் தான்! :)

கம்பர், இரணிய வதைப் படலம் என்று பிரகலாதன் கதையைச் சொன்னது மூல நூலில் இல்லை என்பது வாதம். கந்த புராணத்தின் ஆரம்பமே, திகட சக்கரம் என்று இலக்கணப் பிழை என்பது இன்னொரு வாதம்!

இந்த இரண்டு நூல்களும் கடைசியில் எங்கே அரங்கேறின?

8

அ) காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம்

ஆ) திருவரங்கம்/ குமரகோட்டம்

இ) திருமாலிருஞ் சோலை/ பழமுதிர் சோலை

ஈ) இராமேஸ்வரம்/ திருச்செந்தூர்

9

இராமனின் காவியம் = கம்பராமாயணம், நபிகளின் காவியம் = சீறாப்புராணம்!

இரண்டுமே வள்ளல்கள் உதவி செய்து தான் பின்னர் எழுதப்பட்டன! ஒரு வள்ளல் கம்பருக்கு உதவி, இன்னொரு வள்ளல் உமறுப் புலவருக்கு உதவி!

யார் அந்த இரு பெரும் நல்ல வள்ளல்கள்?

9

அ) குலோத்துங்க சோழன்/ படிக்காசுப் புலவர்

ஆ) சடையப்பர்/ குணங்குடி மஸ்தான் சாகிபு

இ) கபிலர்/ படிக்காசுப் புலவர்

ஈ) சீதக்காதி/ சடையப்பர்

10

இவர் பெரும் வைணவராக இருந்து, பின்னாளில் இயேசு பிரான் பால் ஈர்க்கப்பட்டு கிறித்துவராக மாறினார்! பெரும் கிறிஸ்துவ காவியமும் பாடினார்!

யார் இவர்? என்ன காவியம்?

10

அ) மாயூரம் வேத நாயகம் பிள்ளை/ பிரதாப முதலியார் சரித்திரம்

ஆ) வீரமா முனிவர்/ தேம்பாவணி

இ) எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை/ இரட்சணிய யாத்திரிகம்

ஈ) கண்ணதாசன்/ இயேசு காவியம்



இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) கடவுள் வாழ்த்து ஆ) துறவு இ) நீத்தார் பெருமை ஈ) தவம்

2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார் ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள் இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள் ஈ) திலகவதியார்/ வாயிலார்

3 அ) பெளத்தம்/ சீத்தலைச் சாத்தனார் ஆ) சமணம்/ பெயர் இல்லை (அனானி) இ) பெளத்தம்/ நாகுதத்தனார் ஈ) சமணம்/ திருத்தக்க தேவர்
4 அ) கொற்றவை நிலை/கரந்தை ஆ) பூவைநிலை/ வெறியாட்டு இ) பூவைநிலை/ பிள்ளைநிலை ஈ) குரவை/ வெறியாட்டு
5 அ) ---/ ஊக்கமுடைமை ஆ) ---/ஆள்வினை உடைமை இ) ---/மடியின்மை ஈ) ---/மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
6 அ) கலித் தொகை/பல ஆசிரியர்கள் ஆ) திருக்குறள்/ திருவள்ளுவ நாயனார் இ) குறிஞ்சிப்பாட்டு/ கபிலர் ஈ) திருமுருகு ஆற்றுப்படை/ நக்கீரர்
7 அ) திருவேங்கடம்/ காளத்தி ஆ) அழகர் கோயில்/ பழமுதிர் சோலை இ) திருவரங்கம்/ சுவாமிமலை ஈ) அழகர் கோயில்/ திருப்பரங்குன்றம்
8 அ) காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் ஆ) திருவரங்கம்/ குமரகோட்டம் இ) திருமாலிருஞ் சோலை/ பழமுதிர் சோலை ஈ) இராமேஸ்வரம்/ திருச்செந்தூர்
9 அ) குலோத்துங்க சோழன்/ படிக்காசுப் புலவர் ஆ) சடையப்பர்/ குணங்குடி மஸ்தான் சாகிபு இ) கபிலர்/ படிக்காசுப் புலவர் ஈ) சீதக்காதி/ சடையப்பர்
10 அ) மாயூரம் வேத நாயகம் பிள்ளை/ பிரதாப முதலியார் சரித்திரம் ஆ) வீரமா முனிவர்/ தேம்பாவணி இ) எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை/ இரட்சணிய யாத்திரிகம் ஈ) கண்ணதாசன்/ இயேசு காவியம்

Tuesday, December 23, 2008

புதிரா? புனிதமா?? - திருப்பாவைக் குறுக்கெழுத்து விளையாட்டு!

Jan-02, 2009 03:33 AM EST
முடிவுகள், பரிசுகள் அறிவிச்சாச்சே! :)

பரிசு அறிவிப்பு பதிவு இங்கே! சரியான விடைகள் இதோ!


[crossword_answers.jpg]

இந்தப் போட்டியில் பலரும் ஆர்வங் காட்டிக் கலந்துக்கிட்டீங்க! ரொம்ப நன்றி!


மக்களே, ஃபார் ஏ சேஞ்ச்...ஒரு விளையாட்டு விளையாடுவோம் வாங்க! திருப்பாவை வெளக்கமாவே கேட்டுக்கிட்டு இருந்தா உபன்யாசம் மாதிரி-ல்ல ஆயிரும்? எப்பமே லெக்சர் டைப் ஆன்மீகம் நமக்கு மிக்சர் டைப் ஆயிரும்!
ஹிஹி! இரு வழிப் பங்கேற்பு (Two Way Participation) ரொம்ப முக்கியம்!
அப்போ தான் ஆன்மீக டேபிள் டென்னிஸ் ஜாலியாப் போவும்! வாங்க ஆட்டையப் போடலாமா?

இந்த விளையாட்டு - திருப்பாவைக் குறுக்கெழுத்து! Paavai Crosswords!

புதிர் எல்லாம் முக்கால்வாசி திருப்பாவையில் இருந்து தான்! நடுநடு-ல கொஞ்சம் ஜெனரல் தமிழ்க் கேள்வீஸ்!

ஆண்டாளுக்கு இந்த எக்-ஜாம், பன்-பட்டர்-ஜாம் எல்லாம் புடிக்காது! எப்பமே திறந்த புத்தகம்! ஓப்பன் புக் டெஸ்ட்!
* இது வரை மாதவிப் பந்தலில் வந்த பாவைப் பதிவுகளைப் பார்த்தும் எழுதலாம்! ஆனா இன்னும் பாவைப் பதிவுகள் முடியலை!
* அதுனால இந்தாங்க முழுப் புத்தகம்! பார்த்தே தேர்வு எழுதலாம்! :)

குறுக்கெழுத்தைப் பிரிண்ட் எல்லாம் எடுக்கத் தேவையில்ல! அப்படியே திரையிலேயே டைப் பண்ணிப் பாக்கலாம்! விடைகள் செட் ஆனவுடன், பின்னூட்டத்தில் இடுங்க!
புதிர்களுக்கான குறிப்பும், எழுத்து எண்ணிக்கையும் கீழே! கூடவே * மார்க்கில் அந்த அந்தத் திருப்பாவையின் நம்பர்! இத விட ஈசி இருக்க முடியுமா? அடிச்சி ஆடுங்க!

விடைகள் கிறிஸ்துமஸ் கழிச்சி சொல்லட்டுமா? குறுக்கெழுத்துப் பரிசும் உண்டு! :)
ரெடி, இஸ்டார்ட், மீஜிக்!


1 2 3
4
5 6
7
89 10
1112
1314
15
16
17 18



ACROSS - இடவலம் பிரதட்சிணம்
1. தாழாதே இந்த ஆயுதம்-சர மழை பெய்யும் (5) *4
3. இதுக்குச் செல்வம்-ன்னும் ஒரு அர்த்தம் இருக்கு! இதை மேய்த்துச் சாப்பிடும் குலத்தில் பிறந்தவன்!(4) *29
5. இதான் வீடு - இவருக்கும், நமக்கும்! கடைசி எழுத்து கட் ஆகியுள்ளது (4) *9
6. பொன்றச் சக்கரம் உதைத்தவன் என்ன போற்றி? (3) * 24
7. சிற்றாதே பேசாதே பணக்கார **! மனைவின்னும் கொள்ளலாமோ? (2) *11

8. பகாசுரன் ஒரு **! அதன் வாய் கீண்டான் (2) *13
9. நோன்புச் சாமான் - தமிழில் Explain (6) *26
11. இவன் கையில் மின்னல், சக்கரம் போல மின்னும் (6) *4
13. நோன்புச் சாமானை எல்லாம் இதன் மேல் படுத்திருப்பவன் தருவான் (5) *26
15. நால் திசை தீர்த்தங்களும் கொணர்ந்து நனி *** (3)

16. மார்கழி மாசம், நிலா நெறைஞ்ச நாளு(5) *1
17. இது அமெரிக்க, ஐரோப்பா, இந்தியா-ன்னு எல்லா இடத்திலும் பெய்யுது! தலை மேல வீழ, உன் வாசப்படி கடைப்பற்றி (2) *12
18. (வலமிருந்து இடம்) இது இருப்பார் போல் நாங்கள் எல்லாம் வந்து, உன் பள்ளிக்கட்டிற் கீழே, தலைப் பெய்தோம் (4) *22


DOWN - மேல்கீழ் பிரதட்சிணம்
1. இதை வைத்துக் கொண்டு பல்லாண்டு இசைப்பாரே! (8) *26
2. இதன் பின்னாலேயே போவோம்! கானகம் சேர்ந்து, உண்போம் (5) *28
4. கூர் வேல், கொடுமையான வேலை செய்பவனின் குமரன் (6) *1
6. பறவை அரசன், பட்சி ராஜன், கருடன் (6) *6
10. ஓசை படுத்த தயிர் கடையும் சத்தம் கேக்கலையோ? (5) *7

12. இவனாய் நின்று, கண்ணனோட அப்பா, கோயில் காப்போனே (5) *16
14. கடிதத்தின் வடமொழிச் சொல்(4)
15. வேங்கடவா! நாங்கடவா வண்ணமே என்ன? (3)
16. சால உறு தவ ** கூர் கழி (2)


இது விடைகளைக் கடேசியா காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளுக்கு ஈசியா இருக்கும்! :)
ACROSS - இடவலம்
1.
3.
5.
6.
7.

8.
9.
11.
13.
15.

16.
17.
18.

DOWN - மேல்கீழ்
1.
2.
4.
6.
10.

12.
14.
15.
16.

Tuesday, October 21, 2008

சங்கத் தமிழ்: நக்கீரர் முருகனைத் தவிர வேறொரு தெய்வத்தைப் பாடுவாரா???

"இனியதைக் கேட்க மட்டுமல்ல, உனக்குக் கொடுக்கவும் செய்வேன்! இனிதே, இனி-யது உனதே" என்று கொடுத்தான் நண்பன் இராகவன். அவனுக்கு முகமன் சொல்லிக் கொண்டு அடியேனும் இனியதில் துவங்குகின்றேன்.

இனி-யது, இனி-எது? என்ற கேள்வி போய்,
இனி-அது, இனி-இது என்று இந்தத் தமிழ்த் தேர்,
இனித் தேற்றமாய் உலா வரும்! அன்பர்கள் எல்லாரும் தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! :)

மறந்தும் புறம் தொழா மாந்தர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க தானே?
நாரை என்பதில் "நாரா"-யணன் இருக்கே; அதனால் கொக்கு என்றே மாற்றிப் பாடிய வீம்புப் புலவர்கள் சிலர்.
சிவப்பு என்பதில் "சிவ" உள்ளதால், சிவ-ப்பை உவப்பாது, சிகப்பு என்றே சொல்லிய சீலர்களும் சிலர்.
இப்படி மறந்தும் புறம் தொழவே கூடாது-ன்னு நினைச்சிக்கிட்டே, அதே "புறத்தை", அகத்தில் நினைவு வச்சிக்கிட்டே இருப்பாங்க. அதான் அங்கே காமெடியே! :)

நக்கீரர் எப்படி?
அய்யோ, அவரா? அவரு பெரும் முருக பக்தர் ஆச்சே!

தமிழ் இலக்கியத்தில் நாம் அறிந்த முதல் முருக பக்தர்!
முருகனுக்கு என்றே தனி ஒரு நூலை ஆற்றுப்படையாய் முதன் முதலில் செய்தவர்!
பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன், உன்னை பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் - என்று சொன்னவர் ஆயிற்றே!
மனுசன் பிற தெய்வங்களை எல்லாம் போற்றிப் பாடுவாரா என்ன?

சேச்சே! பாடவே மாட்டாரு! முருகனை அல்லால் வேறோர் குறுகனை நாடவே மாட்டாரு! அப்படித் தானே நினைக்கறீங்க?

இந்தப் பாட்டைப் படிங்க! திருமால், சிவன், முருகன், பலதேவன் என்று சும்மா தெய்வங்களின் பேர்களை மட்டும் ஒப்புக்குச் சொல்லவில்லை.
அவர்களின் குணங்களை எல்லாம் ஏத்துகிறார். ஒற்றுமைக் கொடியை ஏற்றுகிறார்!

சங்கத் தமிழ் வல்லார் மனதில் ஒற்றுமை அன்றி வேறோர் வேற்றுமை புகுமோ? அது தமிழுக்குத் தகுமோ? பாருங்க எப்படி பாண்டியனைப் புகழ்கிறார் நக்கீரர்.


தமிழ் மாறா மாறா! பாண்டிய மன்னா...

மாற்ற முடியாத கோபத்தில், நீ கூற்றுவனைப் போல இருக்கீயே!
வலிமையில், நீ வாலியோனான பலராமன் போல இருக்கீயே!
புகழ் எங்கும் பரவி இருப்பதில், நீ திருமாலைப் போல இருக்கீயே!
நினைச்சதை முடிப்பதில், நீ முருகனைப் போல இருக்கீயே!

சரி, இவிங்களை எல்லாம் உனக்கு உவமையாச் சொல்கிறேனே! இவிங்க என்ன அவ்ளோ பெரியவங்களா? சொல்லப்படும் பொருளைக் காட்டிலும், உவமைப் பொருள் பெரிதாய் இருக்கணும் என்பது தானே மரபு?

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,

ஏற்று வலன் = ஏறு-ன்னா எருது. ஏற்று வலன்-ன்னா எருதின் மேல் வலம் வருபவன். எருதுக் கொடியோன்-ன்னும் எடுத்துக்கலாம்.

உயரிய எரி மருள் அவிர் சடை = சிவனார் என்றாலே அவர் சடாமுடி தானே மகுடம் போல பளிச்-னு தெரியும்? அவர் சடை அலங்கலாரம் எப்படி இருக்காம்?
உசரமான நீண்ட சடை, எரி(தீ) போல் செஞ்சடை, சுழற்சிகளால் மருள வைக்கும் சடை. அது மட்டுமா? அவர் சடை, அவிர் சடை.

அவிர் மதிக்குப் போல, மறுவுண்டோ மாதர் முகத்து என்பது குறள். அவிர் அப்படின்னா மின்னும்-னு பொருள்.
சடை எப்படிய்யா மின்னும்? உங்க தலைமுடி மின்னுமா என்ன? பளபள ஜெல் பூசும் அழகான பெண்களைக் கண்ணெடுத்துப் பாருங்க! சடை மின்னுவது தெரியும்! :)

சிவனார் முடியில் என்னென்ன இருக்கு?
பாதி மதி இருக்கு, நதி இருக்கு, போது மணி என்னும் ருத்திராட்சம் இருக்கு! போதாதா மின்னிட?

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும் = கணிச்சி-ன்னா என்ன? கணிப்பொறியா? இல்லைக் கணினியைத் தட்டும் அழகான பெண்ணைக் கணிச்சி-ன்னு கூப்பிடலாமா? :)

கணிச்சி என்றால் மழு-ன்னு பொருள். மானும் மழுவும் ஏந்தியவன் ஈசன்.
மழு என்றால் பெரிய திரிசூலம் அல்ல! சிறிய கைச்சூலம்-ன்னு வச்சிக்கலாம். மழுவைக் க்ளோசப்பில் யாராச்சும் பார்த்து இருக்கீங்களா?

மணி மிடறு-ன்னா நீலமணி போல கழுத்து.
மிடறு என்பது அழகான தமிழ்ச் சொல். இப்பல்லாம் ரொம்ப புழங்கறது இல்லை!
மருந்து குடிக்கும் போது கூட ஒரு மிடறு (கழுத்து) குடி-ன்னு சொல்வாங்க.
அதாச்சும் கழுத்து ஒரு முறை உள் வாங்கித் தள்ளும் அளவுக்கு, மிடறு-ன்னு பேரு வச்சிருக்காங்க நம்ம மக்கள். பாருங்க காரணப் பெயர்களின் தமிழ்ச் சுவையை!
சரி சிவனைப் பார்த்தாச்சு. அடுத்து யாரு?



கடல் வளர் புரி வளை புரையும் மேனி = கடல்ல வளரும் புரி (சங்கு); வலம்புரி-ன்னு சொல்றோம்-ல? அதான்! வளைந்த சங்கு போல் வெளுப்பான மேனி.
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும் = நாஞ்சில்-ன்னா கலப்பை. இ-கலப்பை இல்லீங்க, ஏர்க் கலப்பை!
அடல்-ன்னா வலிமை. நல்லா திடமான, கூர்மையான கலப்பை. சரி, கலப்பை வச்சிருப்பது யாரு?

பலதேவன். கண்ணனின் அண்ணன்! அவன் கையில் தான் கலப்பை இருக்கும்.
அட, பலதேவன் கூடப் பழந்தமிழர் தெய்வமா என்ன?

இஸ்கான்-ல மட்டும் தான் கிருஷ்ணன்-பலதேவன் சிலை வச்சிருப்பாங்க. சென்னை திருவல்லிக்கேணி கோயில்-ல, பெருமாள் கூடவே அவர் அண்ணன் பலதேவனும் பக்கத்துல நிப்பாரு. செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா என்கிறாள் கோதை. அவர் கொடியில் பனைமரச் சின்னம் இருக்கும். அதான் பனைக் கொடியோன். பலதேவனுக்கு இன்னொரு பெயர் வாலியோன்.

தமிழர்களின் தொலைந்து போன தெய்வங்களுள் வாலியோனும் அடக்கம். ஆரியப் பண்பாட்டுக் கலப்பிலே முருகன்=ஸ்கந்தன், திருமால்=விஷ்ணு, நப்பின்னை=லக்ஷ்மீ, கொற்றவை=காளி என்று ஆனது போல, பலதேவன்=பலராமன் ஆனான். அப்புறம் அதிகம் பேசப்படவில்லை. மாயோன் மட்டும் தங்கிட, மாயோன் அண்ணன் மாயமாய்ப் போனான்.



மண்ணுறு திரு மணி புரையும் மேனி = மண்ணுறு திருமணி என்றால் நீலமணி. மண்ணில் கிடைத்தால் நீலமணி, நீரில் கிடைத்தால் முத்துமணி. நீலமணி போல் விளங்கும் திருமேனிக்குச் சொந்தக்காரன் யார்? கருகருவென்று இருக்கும் கருப்பன் யார்? கண்ணனே அந்தக் கருப்பன், நம் விருப்பன்!

விண் உயர் புள் கொடி = விண்ணிலே உசரமாய்ப் பறக்கும் பறவை (புள்) கருடன்; அந்தக் கருடக் கொடியைக் கொண்ட கோவிந்தன்.
கோ-விந்தன் என்ற தமிழ்ப் பெயரைக் கோனார்கள் அதிகமாய் வைத்துக் கொள்வார்கள். காடும் காட்டு சார்ந்த பறவை தான் கருடன். அடர்ந்த காட்டில் ஆயர்களுக்கு ஆநிரை செல்லும் வழிகாட்ட வல்லது.

விறல் வெய்யோனும் = அந்தக் கோவிந்தன் திறமை (விறல்) மிக்கவன். வெய்யோன் (பகலவன்) போல எங்கும் ஒளி வீசுபவன்.


விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,


மணி மயில் உயரிய = மணிகளைப் போல் பல நிறம் கொண்ட மயில் கொடி உடையவன்.
மாறா வென்றி = வெற்றி என்பது வென்றி ஆனது! வாட் இஸ் தி இலக்கணக் குறிப்பு? சொல்லுங்க பார்ப்போம்!

மாறாத வெற்றி உடையவன்! வெற்றி தோல்வி மாறி மாறி வரும்! ஆனால் வெற்றியை வேலிலேயே கொண்டவனுக்கு வெற்றி மாறுமோ? வெற்றிவேல் முருகனல்லவா அவன்?
பிணிமுக ஊர்தி = பிணிமுகம் ன்னா யானை. யானை வாகனம் யாருக்கு?
ஒண் செய்யோனும் = ஒளி பொருந்திய சேயோன்....அட நம்ம முருகன்!

அவனுக்குச் சேவல் தானே கொடி? எப்படி மயில் கொடி-ங்கிறாரு?
அவனுக்கு மயில் தானே வாகனம்? எப்படி யானை வாகனம்-ங்கிறாரு?

நக்கீரருக்கு முருகனைப் பத்தி ஒன்னுமே தெரியாதா என்ன? ஏன் இப்படி மாத்தி மாத்திப் பாடுறாரு? சொல்லுங்க பார்ப்போம்! :)

ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,

= இப்படி ஞாலத்தைக் (உலகத்தை) காப்பவர்களும், பல காலமாய் இருப்பவர்களும், தோலாத (தோற்காத) புகழைக் (இசையை) கொண்டவர்களுமான நால்வர்
= சிவன், வாலியோன், திருமால், முருகன்!


கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்


மாற்ற முடியாத கோபத்தில் கூற்றுவனைப் (சிவனை) போல இருக்கீயே!
வலிமையில் பலராமன் போல இருக்கீயே!
புகழ் பரவி இருப்பதிலும், பகைவரைப் பணிய வைக்க வல்லதிலும் திருமாலைப் போல இருக்கீயே!
நினைச்சதை முடிப்பதில் முருகனைப் போல இருக்கீயே!
ஆங்காங்கு அவரவரைப் போல் இருக்கும் பாண்டிய மன்னா!

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,


அரியவும் உளவோ, நினக்கே? = உனக்கு அரியது-ன்னு ஒன்னு இருக்கா என்ன?
அதனால், இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா = வேண்டுபவர்க்கு அருமையான பரிசுப் பொருட்களைக் குறையாது தருபவன் நீ!

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் = யவனர்-னா யாருங்க? கிரேக்கர்-ரோமானியர்!
கிரேக்கர்-ன்னு கூப்பிடாம, ஏன் அவிங்கள நம்மாளுங்க யவனர்-னு கூப்பிட்டாங்க?

யவனர்கள் கப்பலில் ஏற்றி வரும் தேறல் என்னும் தேன்/மது, சும்மா தண்-னு (ஜில்லுனு) வாசமா இருக்காம்!
பொன் செய் புனை கலத்து ஏந்தி = அதை பொன் கலங்களில் ஊற்றி,
நாளும் ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து = அழகான பெண்கள் ஊற்றிக் கொடுக்க, மகிழ்ச்சியாக இரு-ன்னு நக்கீரர் பாண்டியனை வாழ்த்துகிறார்.

அடா, அடா, அடா...ஜில்லுனு வாசமா இருக்குற அரச மீனவன் பியரை, பாவனா ஊற்றிக் கொடுக்க, மகிழ்ச்சியா இரு-ன்னு, இப்ப யாராச்சும் என்னை வாழ்த்தினாங்க-ன்னா எப்பிடி இருக்கும்? :))


ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!


மது அருந்தினால் மட்டும் போதுமா? மத வலிமையும் வேண்டும் அல்லவா? வாள் ஓங்கிப் பிடிக்கும் மாறா,
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் வெங் கதிர்ச் செல்வன் போலவும் = ஆகாயத்தில் இருள் அகற்றும் கதிர்ச் செல்வன் போலவும் (கதிர்ச்செல்வன் = ஆண்பிள்ளைக்கு ஒரு பேரு கிடைச்சிருச்சே!)

தண் கதிர் மதியம் போலவும் = குளிர்ச்சியான கதிர் நிலாவைப் போலவும் (கதிர் நிலா = பெண்பிள்ளைக்கு ஒரு பேரு கிடைச்சிருச்சே!)
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே! = உலகத்துக்கு எப்படி ஒரே சமயத்தில் சூரியனும் சந்திரனும் இருக்குதோ, அதே போல நீயும் நின்று நிலைப்பாயாக!

திணை = பாடாண் திணை
துறை = பூவை நிலை
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை,
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது!

புற நானூற்றுச் செய்யுள் 56ஆம் பாடல் எப்படி இருக்கு மக்கா?

முருக அன்பர்கள், மறந்தும் புறம் தொழாதவர்களா என்ன?
மாயோனையும் பாடும் வாயோன் என்று தன்னை அறிவித்து, நமக்கும் அறிவிக்கிறார் ஆசான் நக்கீரர்!
அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து, அலைவாய் உகந்த பெருமாளே!